17 வயது சிறுவனுடன் தலைமறைவான பெண்… கணவர் போலீசில் பகீர் புகார்!

ராஜபாளையத்தில் 17 வயது சிறுவனுடன் தலைமறைவான பெண்ணை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் அருகில் உள்ள செங்கல் சூலையில் பணியாற்றி வந்த நிலையில், இவரை காணவில்லை என கூறி அவரது கணவர் போலீசில் புகாரளித்தார்.

அதே நேரத்தில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 17 வயது சிறுவனும் காணாததால் சந்தேகமடைந்த போலீசாருக்கு, இருவரும் கன்னியாகுமாரியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், வழக்கை போக்சோ வழக்காக மாற்றி மகாலட்சுமியை கைது செய்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!