4 கி.மீ. தூரம் காரில் இழுத்து செல்லப்பட்ட ஓட்டல் உரிமையாளர்!

பெங்களூரு மரியப்பன பாளையாவை சேர்ந்தவர் தர்ஷன்(வயது 31). இவர், பாப்பிரெட்டி பாளையாவில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இவர் தனது வீட்டில் இருந்து காரில் ஓட்டலுக்கு சென்ற போது ஞானபாரதி அருகே உல்லால் மெயின் ரோட்டில் காரில் வந்த பிரியங்கா என்ற இளம்பெண்ணுடன் தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் காரில் ஏறி செல்ல முயன்றார்.

உடனே காருக்கு முன்பாக தர்ஷன் போய் நின்றார். ஆனால் தர்ஷன் நிற்பதை பொருட்படுத்தாமல் அந்த பெண் காரை ஓட்டினார். அப்போது கார் தன் மீது ஏறி விடாமல் இருப்பதற்காக, காரின் முன்னால் உள்ள பகுதியில் தர்ஷன் சாய்ந்து விழுந்து படுத்து கொண்டார்.

ஆனாலும் அந்த பெண் காரை நிறுத்தாமல், அங்கிருந்து வேகமாக சுமார் 4 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்றார். காரின் முன்பகுதியில் படுத்திருந்த தர்ஷன் கண்ணாடிக்கு கீழே இருக்கும் பகுதியை பிடித்து கொண்டபடி ஆபத்தான நிலையில் தொங்கினார்.

இதை அறிந்த தர்ஷனின் நண்பர்கள் பின்னால் வந்து காரை நிறுத்தி தர்ஷனையும் காப்பாற்றினார்கள்.பிரியங்கா, அவருடன் வந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!