காதலர்கள் சிலைக்கு திருமண செய்துவைத்த குடும்பத்தினர்! குஜராத்தில் வினோதம்!

குஜராத் மாநிலத்தில் இறந்த காதலர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் சிலை செய்து அந்த இரு சிலைக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துவைத்துள்ளனர்.

அந்த தம்பதி இருவரும் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டு சரியாக 6 மாதங்கள் கழித்து இப்போது அவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து இப்படி ஒரு வினோதமாக திருமணம் செய்துவைத்துள்ளனர்.


மகன் மற்றும் மகளை இழந்த இரு வீட்டாரும் தங்களின் தவறை உணர்ந்து மிகவும் வேதனையில் இருந்துள்ளனர்.


இந்தியா முழுவதும் இதுபோன்ற பிரச்சனைகள் பல ஏற்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் வேற்று ஜாதி, வேற்று மதம், பொருளாதார அடிப்படை போன்ற முக்கியமான விஷயங்கள் காரணங்களாக உள்ளன.


இந்தியாவில் காதலித்து இறந்துபோன மகன் மற்றும் மகளுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சேர்ந்து திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் தப்பி மாவட்டத்தில் நடந்துள்ளது.

அங்கு இருந்த காதலர்கள் இருவர் பல ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். ஆனால் அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இந்தியா முழுவதும் இதுபோன்ற பிரச்சனைகள் பல ஏற்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் வேற்று ஜாதி, வேற்று மதம், பொருளாதார அடிப்படை போன்ற முக்கியமான விஷயங்கள் காரணங்களாக உள்ளன. இதேபோன்ற ஒரு பிரச்சனை இந்த கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவருக்கும் நடந்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டு மிகவும் வேதனை அடைந்த அவர்கள் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்துகொண்டனர். மகன் மற்றும் மகளை இழந்த இரு வீட்டாரும் தங்களின் தவறை உணர்ந்து மிகவும் வேதனையில் இருந்துள்ளனர்.

தற்போது இரு வீட்டாரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் சிலை ஒன்றை செய்து அந்த சிலைக்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்துள்ளார்கள். இந்த திருமணம் ஜனவரி 14 அன்று நடந்தது. இது தற்போது வைரலாக மாறியுள்ளது. பலர் இந்த காரணத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!