இப்படி பாடா படுத்துறீங்களே… பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது புலம்பும் சிறுவன்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில், பள்ளி செல்வதற்கு சிறுவன் ஒருவனை அவனது தாயார் அழைத்து செல்கிறார்.

அந்த சிறுவன் நேற்றுதானே பள்ளிக்கூடம் போனேன், இன்னைக்கும் ஏன் போக சொல்றீங்க, உடம்பு சரியில்லாத பையன இப்படி பாடா படுத்துறீங்களே, இது நியாயமா, எல்லாம் என் தலை எழுத்து என தலையில் அடித்து அழுது புலம்பியபடியே செல்கிறான்.

அவனை தாயார் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்து செல்கிறார். சிறிய வயதில் பெரியவர்கள் போல் அந்த சிறுவன் புலம்பித்தள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!