இப்போ சந்தோஷமா பிக்பாஸ்..? வீட்டின் உள்ளே வந்த பிரபல நடிகை!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள், இதற்குத் தானே தனலட்சுமியை வெளியேற்றினீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் கடுப்பாகி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தாரை பார்த்து பல நாட்களாகிவிட்டது. அதனால் குடும்பத்தாரை அழைத்து வந்து போட்டியாளர்களை சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவில் ரச்சிதா மகாலட்சுமியின் அம்மாவை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

மணிகண்டன்

ரச்சிதாவின் அம்மாவை அடுத்து மணிகண்டனின் குடும்பத்தார் வந்திருக்கிறார்கள். அம்மா, மனைவி, மகன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வந்திருக்கிறார்கள். மகன் முதல் ஆளாக வந்ததை பார்த்த மணிகண்டனோ சந்தோஷத்தில் ஓடிப் போய் கட்டியணைத்தார். இதையடுத்து மனைவியும், அம்மாவும் வந்தார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் வேறு ஒரு வாசல் வழியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ஐஸ்வர்யா ராஜேஷை அழைத்து வந்து டி.ஆர்.பி.யை ஏற்ற வேண்டும் என்று தானே சூப்பராக விளையாடி வந்த தனலட்சுமியை அவசர அவசரமாக பேக் செய்து அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மணிகண்டன் குடும்பத்தால் மட்டும் டி.ஆர்.பி. எகிறிவிடாது. மணிகண்டனின் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார். அவரின் குடும்பமே க்யூட்டாக உள்ளது. இருந்தாலும் தனலட்சுமியை வெளியேற்றியது தவறு தான் என்கிறார்கள்.

போதும்

பார்வையாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது, மணியை இத்தனை நாட்களாக இதற்குத் தானே தங்க வைத்தீர்கள். அதான் வேலை முடிந்துவிட்டது அல்லவா?. குடும்பத்தாருடன் சேர்த்து மணியையும் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். இந்த ஒரு ப்ரொமோவுக்காக மணிகண்டனை எத்தனை முறை கேப்டன் ஆக்கினார்கள். எத்தனை பேரை பலி ஆடாக்கினார்கள். இப்போ சந்தோஷமா பிக் பாஸ் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனலட்சுமி

தன் குடும்பத்தார் வர வேண்டும் என்று தனலட்சுமி ஆசைப்பட்டார். டாஸ்குகளையும் சிறப்பாக செய்தார். கன்டன்ட் கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார். அசீமுக்கு டஃப் கொடுத்தார். திமிர் இருந்தாலும் சிறப்பாக விளையாடினார். அவரை இந்த வாரம் வரைக்காவது தங்க வைத்திருக்கலாம் பிக் பாஸ் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரச்சிதா

ரச்சிதா தான் அவரின் அம்மா எப்படிப்பட்டவர் என்று கூறி அழுதாரே. ரச்சிதா பெண்ணாக பிறந்த காரணத்திற்காக அவரின் கழுத்தை நெரித்து செத்துடு, செத்துடுனு சொல்லியிருக்கிறார். அவரை போய் அழைத்து வந்து பாச டிராமா போட வைத்திருக்கிறீர்களே பிக் பாஸ். இன்னும் என்ன கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குமோ என பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!