பெண் அதிகாரி முன் கதறி அழுத ஷீஜன் கான்!

பிரபல நடிகை துனீஷா சர்மா, அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் தேநீர் இடைவேளையின்போது, கழிவறையில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் வாலிவ் நகர போலீசார் சக நடிகரான ஷீஜன் கானை கைது செய்துள்ளனர். விசாரணையில் தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம் என போலீசார் கூறினர்.

இந்நிலையில், ஷீஜன் கான் மீது துனீஷாவின் தாயார் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷீஜன் கானை கைது செய்தனர்.

நடிகர் ஷீஜன் கானை 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது. அவர், வாலிவ் போலீசாரிடம் முதல் நாள் விசாரணையில் கூறும்போது, ஷ்ரத்தா வாக்கர் கொடூர சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் காணப்படும் சூழ்நிலை மற்றும் அதன் பின்விளைவுகளை பார்த்தும் மற்றும் வெவ்வேறு சமூகம், வயது வித்தியாசம் ஆகியவற்றை பற்றியும் துனீஷாவிடம் எடுத்து கூறினேன்.

அதனால், இந்த உறவை முறித்து கொள்ள முடிவு செய்தேன் என்று போலீசில் கூறியுள்ளார். இருவரும் பிரிந்த பின்னர், ஒரு முறை துனீஷா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுபற்றி ஷீஜன் கான் கூறும்போது, துனீஷா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், அந்த நேரத்தில் நான் அவரை காப்பாற்றினேன். அதன்பின் துனீஷாவின் தாயாரிடம் அவரை நன்றாக கவனித்து கொள்ளும்படி கூறினேன் என்றும் போலீசில் கான் கூறியுள்ளார். துனீஷா தற்கொலை செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனீஷாவை தற்கொலைக்கு இட்டு சென்ற விசயம் என்ன?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், நடிகை துனீஷாவின் தாயார் வனிதா சர்மா, நடிகர் ஷீஜன் கான் மீது நேற்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். அவர் கூறும்போது, துனீஷாவை ஷீஜன் கான் ஏமாற்றி விட்டார். துனீஷாவுடன் முதலில் பழக தொடங்கிய ஷீஜன் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். பின்னர் உறவை முறித்து கொண்டார்.

துனீஷாவுடன் பழகும்போதே அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்துள்ளது. துனீஷாவை 3 முதல் 4 மாதங்கள் வரை ஷீஜன் கான் பயன்படுத்தி கொண்டார். அவரை போலீசார் தப்ப விட கூடாது என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் 2 நாட்கள் விசாரணை முடிவில் போலீசார் இன்று கூறும்போது, தொடர்ந்து மாறி மாறி கான் வாக்குமூலங்களை அளித்து வருகிறார். இருவரும் பிரிந்தது ஏன்? என சரியான காரணம் எதுவும் இதுவரை கூறவில்லை. ஷீஜனின் ரகசிய காதலியை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது என கூறியுள்ளனர்.

வாலிவ் காவல் நிலைய பெண் அதிகாரி விசாரணைக்கு வந்தபோது, ஷீஜன் அழ தொடங்கி விட்டார். 2 நாட்களாக வேறு, வேறு காரணங்களை அவர் கூறி வந்த நிலையில், பெண் விசாரணை அதிகாரி வந்ததும் அழ தொடங்கி விட்டார் என காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

துனீஷாவின் குடும்பத்தினர் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றபோதிலும், தனது வாழ்வில் வேறு எந்த பெண்ணுடனும் தனக்கு தொடர்பில்லை என்று ஷீஜன் கான் மறுத்துள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை வழக்குடன் தொடர்புடைய 17 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும்.

விசாரணைக்கு நன்றாகவே அவர் ஒத்துழைப்பு வழங்கினார். அவரது முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால், ஒவ்வொரு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர்.

நடிகை துனீஷா முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா – மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். தவிர, இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தொடர் தவிர, இந்தி திரைப்படங்களான பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங் மற்றும் தபாங் 3 ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!