சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு ஜாமீன் கிடைத்தது!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் விஜயன் (வயது31).

பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான இவர், யூ டியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாருக்கு நடந்த திருமணம் தொடர்பாக வனிதா விஜயகுமாரும், சூர்யாதேவியும் சமூக வலை தளத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வெளியிட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சூர்யா தேவி அவரது அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி அளித்த புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், நாஞ்சில் விஜயன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடிகர் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த நிலையில், அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!