கட்டப் பஞ்சாயத்து பண்னாதீங்க – விம்ரமனிடம் மோதும் அசீம்!

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 75-வது நாட்களை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ரேங்க்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டினில் உள்ளவர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப 1 முதல் 10 வரை தங்களை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அசீம் முதல் இடத்தில் நிற்க, இதனை கேள்வி கேட்கும் விதமாக விக்ரமன் ஏதோ கூற முயற்சிக்கிறார். அச்சமயம் விக்ரமன் ஏன் நீங்க கட்டப் பஞ்சாயத்துக்கு வறீங்க, பழக்கமாகிடுச்சோ என்று அசீம் கூறுகிறார்.

இதனால் கோபமடையும் விக்ரமன், ஒரு விளையாட்டிற்காக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ அவமானப்படுத்துவதோ ரொம்ப தவறு.

உங்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்குறேன். இதற்கு ஒரு உதாரணம் நீங்க சொல்லித்தான் ஆகனும் என்கிறார். இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரொமோவால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!