இனி எனக்கு குழந்தை இருக்கோ தெரியல… கதறி கதறி அழத ரச்சிதா!

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அழுது கொண்டே கடித்ததை வாசிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6 போட்டியாளரான ரச்சிதா மகாலட்சுமி அழ அதை பார்த்து அவரை கட்டிப்பிடித்து ஷிவின் கணேசன் அழுதிருக்கிறார்.

அழுகை

நேற்று இரண்டு அழுகாச்சி வீடியோவை வெளியிட்டார் பிக் பாஸ். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் எதற்கும் கலங்காத அசீமை அழ வைத்து அவரை விக்ரமன் சமாதானம் செய்யும் காட்சி வந்தது.

இதையடுத்து வெளியாகியிருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவிலும் ஹவுஸ்மேட்ஸ் அழுது கொண்டிருக்கிறார்கள்.

ரச்சிதா

ரச்சிதா மகாலட்சுமி அழுது கொண்டே கூறியிருப்பதாவது, அந்த கடவுளிடம் கேட்டுக் கொள்வது ஒன்னே ஒன்னு தான். எனக்கு இதுக்கப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று சத்தியமாக தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்கிறதா என்று கூட தெரியாது.

என் அம்மா தான் எனக்கு குழந்தை என்று அவர் கூறும்போதே மைனா நந்தினியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அம்மா சென்டிமென்ட்டை கேட்டதும் ஷிவினால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

ஷிவின்

ரச்சிதா மேலும் கூறியதாவது,அந்த கடவுள் அந்த குழந்தையை என் கூட கடைசி வரைக்கும் கொடுக்கணும். அந்த குழந்தையை நான் நல்லபடியா பார்த்துக்கணும். அது மட்டும் தான் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுக்கப்புறம் எனக்கு நீனு, உனக்கு நான் என்று வாழ நான் ரெடியாக இருக்கிறேன் அம்மா என்றார். உடனே அவரை கட்டிப்பிடித்து அழுதார் ஷிவின். அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

பார்வையாளர்கள்

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, சாரி ரச்சிதா நீங்கள் ஃபீல் பண்ணுவதை பார்க்கும்போது எங்களுக்கு பாவமாகத் தெரியவில்லை. ஏதோ எக்ஸ்ட்ராவாக நடிப்பது போன்று உள்ளது. நேற்று தானே உங்கள் அம்மா உங்களை கழுத்தை நெரித்து செத்துடு செத்துடுனு சொன்னாங்க என்று கேட்டுள்ளனர்.

ராபர்ட்

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் இருப்பது தான் சிறந்தது. ப்ரொமோ வீடியோவை பார்க்கும் ஆசை கூட போய்விட்டது. நல்ல காலம் ராபர்ட் மாஸ்டர் பக்கத்தில் இல்லை. இல்லை என்றால் இது தான் சான்ஸுனு ரச்சிதாவை கட்டிப்பிடித்து சமாதானம் செய்திருப்பார். தினமும் இப்படி ஹவுஸ்மேட்ஸை அழ வைத்து வீடியோ வெளியிடுவதை இனியும் பொறுக்க முடியாது என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

அழாதமா

ரச்சிதாவின் ஆதரவாளர்களோ, நீ அழாத தங்கம், நாங்க இருக்கிறோம். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் உங்களுக்குள் இப்படி ஒரு வேதனையா. ஆண்டவன் நிச்சயம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பார் என்று உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் ரச்சிதா கடைசி வரை இருக்க வேண்டிய போட்டியாளர் என்கிறார்கள்.-News & image Credit: amil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!