பிச்சைக்கார தமிழ்நாட்டு பையனை கல்யாணம் பண்ணலாமா..? நெட்டிசன்ஸ் விளாசல்

நாங்க தான் பிச்சை எடுக்கிறோம்னு சொல்லிட்டு இப்போ மட்டும் தமிழ்நாட்டு பையனை கல்யாணம் பண்ணலாமா என நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாக நீங்கள் சொன்ன அந்த பிச்சை மேட்டரை நாங்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை என்று தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் ஏழாம் அறிவு படம் மூலம் கோலிவுட் வந்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணா. அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் தோழியாக நடித்தார். இந்நிலையில் அவருக்கும், மாரி பட இயக்குநர் பாலாஜி மோகனுக்கும் திருமணமாகிவிட்டதாக பேசப்படுகிறது. அதற்கு காரணம் அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தான்.

பிச்சை

தன்யா, பாலாஜி மோகன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். தன்யா நீங்க செய்ததை நாங்க ஒருநாளும் மறக்க மாட்டோம். நாங்க தான் பிச்சை எடுக்கும் ஆட்களாச்சே. அப்புறம் எதற்காக பிச்சை எடுப்பவர்களின் மாநிலத்திற்கு மருமகளாகியிருக்கிறீர்கள் என்று சமூக வலைதளங்களில் தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐபிஎல்

2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது தன்யா பாலகிருஷ்ணா சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்தால் இரு மாநிலங்களுக்கு இடையே டென்ஷன் ஏற்பட்டது. அவர் சமூக வலைதளத்தில் கூறியதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம்.

மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் வந்து எங்களின் அழகிய நகரத்தை ஆக்ரமித்ததுடன், கொச்சைப்படுத்திவிட்டீர்கள். அதை நாங்கள் அனுமதித்தோம். தற்போது நீங்கள் பிளேஆஃப் செல்வது எங்களிடம் உள்ளது. நாங்களும் விட்டுவிடுகிறோம். நீங்கள் பிச்சை எடுப்பதும், நாங்கள் கொடுப்பதும் போன்று. டேய், உங்களுக்கு வெட்கமே இல்லையாடா என்றார்.

சிஎஸ்கே

தன்யா பாலகிருஷ்ணாவின் கருத்தை பார்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தமிழர்களும் கொந்தளித்தார்கள். இதையடுத்து தான் இனி தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்தார் தன்யா. தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று நடித்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டு மருமகளாகிவிட்டார்.

தனுஷ்

பாலாஜி மோகனுக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா?. தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்ன நடிகையை போய் திருமணம் செய்திருக்கிறாரே என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இதற்கிடையே தன்யா, பாலாஜி மோகனின் திருமணம் பற்றி தான் பேசிய வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வைக்க தன்யாவுக்கு உதவியது தனுஷ் என்று தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வைரலான அந்த வீடியோவை பார்த்துவிட்டு தன்யா தனக்கு போன் செய்து மிரட்டியதாகவும் கூறியிருக்கிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!