நாமினேஷன் ஃப்ரீ ஜோனுக்குள் செல்லும் நான்கு போட்டியாளர்கள் யார்..?

நாமினேஷன் ஃப்ரீ ஜோனுக்குள்(Nomination Free Zone)செல்லும் நான்கு போட்டியாளர்கள் யார், யார் என்பதை அறிவித்துவிட்டார் பிக் பாஸ்.

நாமினேஷன் ஃப்ரீ ஜோனுக்கு சென்றிருக்கும் நான்கு போட்டியாளர்களும் வேஸ்ட் தான் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி துவங்கி 68 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் நான்கு போட்டியாளர்கள் நாமினேஷன் ஃப்ரீ ஜோனுக்கு செல்வார்கள் என்று அறிவித்தார்கள். இத்தனை நாட்கள் கழித்து நாமினேஷன் ஃப்ரீ ஜோன் எல்லாம் தேவையில்லாத ஆணி என்று விமர்சனம் எழுந்தது. அந்த நாமினேஷன் ஃப்ரீ ஜோனுக்கு யாரெல்லாம் செல்கிறார்கள் என்பதை அறிவித்து ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நாமினேஷன் ஃப்ரீ ஜோன்

ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் கூறியிருப்பதாவது, நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் நுழையும் நபர்கள் மணிகண்டன் ராஜேஷ், அமுதவாணன், ஜனனி மற்றும் ஏ.டி.கே. என்றார். இதை கேட்டு அந்த நான்கு பேருக்கும் ஒரே சந்தோஷம் தான். ஆனால் பார்வையாளர்களுக்கு தான் சந்தோஷம் ஏற்படவில்லை. மாறாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரமன்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொர்க்கவாசிகள், நரகவாசிகாக இருக்கிறார்கள். சொர்க்கவாசிகள் நரகவாசிகளாக மாறவும் செய்கிறார்கள். இந்நிலையில் நரகவாசியாக இருந்து சொர்க்கவாசியாக மாறிய தனலட்சுமிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவரை மீண்டும் நரகவாசியாக்க விரும்புவதாக விக்ரமன் தெரிவித்துள்ளார். இதை கேட்டு தனலட்சுமிக்கு கோபம் வந்துவிட்டது.

தனலட்சுமி

மூன்று நாட்கள் விளையாடியதற்கு காரணமே இல்லாத ஆளுக்காக வெளியே வந்திருக்கிறேன். இங்க அவனவன் ஃப்ரெண்ஸை அவனவன் தான் உள்ளே அனுப்ப பார்ப்பான் என புலம்பித் தள்ளியிருக்கிறார் தனலட்சுமி. பிக் பாஸ் வீட்டில் குரூப்பிஸம், ஃபேவரிட்டசம் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் தான் தனலட்சுமி இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனனி

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் தனலட்சுமி ஏன் இல்லை?. அமுதவாணனும், ஜனனியும் என்ன செய்தார்கள் என்று பிக் பாஸ் அவர்களை நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் வைத்திருக்கிறார். மேலும் இந்த மணிகண்டனை ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ். அது தான் ஏன் என்று புரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஏ.டி.கே.

பார்வையாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது, ஊர்க்கிழவி கத்தி கத்தி சண்டை போட்டது வீண்போகவில்லை. ஆனாலும் அந்த ஏ.டி.கே.வை பிக் பாஸ் காப்பாற்றக் கூடாது. இந்த வாரம் அவரை தான் வெளியேற்ற வேண்டும்.

தனலட்சுமியை புலம்ப வைத்து சந்தோஷப்படுவதே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வேலையாகிவிட்டது. அவர் புலம்புவதில் இவர்களுக்கு அப்படி என்ன தான் ஆனந்தம் என்று தெரியவில்லை. கஷ்டப்பட்டு சொர்க்கத்திற்கு சென்ற தனலட்சுமியை வெளியேற்றதில் நியாயம் இல்லை. நல்ல போட்டியாளர் என்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!