மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளேன்… ருத்ரமா தேவி பட நடிகை உருக்கம்!

கேன்சரில் இருந்து மீண்டுள்ள நடிகை ஹம்சா நந்தினி மறு பிறவி எடுத்துள்ளதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ஹம்சா நந்தினி. மாடலாக வலம் வரும் ஹம்சா நந்தினி, தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

நான் ஈ

தமிழில் நான் ஈ படத்தில் நடித்தார் ஹம்சா நந்தினி. இதேபோல் ருத்ரமா தேவி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் நடிகை ஹம்சா நந்தினி. அதற்காக அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட நடிகை ஹம்சா நந்தினி, 9 முறை கீமோ தெரபி சிகிச்சைப் பெற்றார்.

புற்றுநோய்

தற்போது மார்பக புற்று நோயில் இருந்து மீண்டுள்ள நடிகை ஹம்சா நந்தினி, கடந்த வியாழக்கிழமை தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய நடிகை ஹம்சா நந்தினி, தான் மறுபிறவி எடுத்திருப்பதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அம்மாவை பறிகொடுத்தார்

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நோய்க்கு தனது அம்மாவை பறிகொடுத்தார் நடிகை ஹம்சா நந்தினி. தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை அறிந்த ஹம்சா நந்தினி, ஆப்ரேஷன் தியேட்டருக்கு நடந்து சென்று தனது மார்பகத்தில் இருந்த புற்று நோய்க்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியதாக தெரிவித்துள்ளார்.

பேக் டூ ஃபார்ம்

புற்றுநோய் பாதிப்பால் முடிகளை இழந்த ஹம்சா நந்தினி, பின்னர் மொட்டை அடித்துக் கொண்டார். இந்நிலையில் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை ஹம்சா நந்தினி, படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார். நடிகை ஹம்சா நந்தினி பேக் டூ ஃபார்ம் ஆகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!