போதையில் உறவு கொண்டால் உச்சக்கட்டத்தை தள்ளிப்போட முடியுமா? அதிர வைத்த ஆய்வு..!


மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்றும் அந்த உச்சக்கட்டம் நீண்டதாக இருக்கும் என்றும் என் நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது சரியா?

சுத்தப் பொய்! மது அருந்தினால் ஆசை அதிகரிக்கும். ஆனால் செயல்பாடு சொதப்பலாகிவிடும். அதுவும் தொடர்ந்து மது அருந்தினால் ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உருமாறி பெண்பால் ஹார்மோனான ஈஸ்டராய்டுகளாகி விடுகிறது.


இதனால் தான் மது போதையில் மூழ்கிய ஆண்களுக்குத் தோல் மென்மையாகிவிடுகிறது. தசை போட்டுவிடுகிறது. பெண்ணைப் போல மார்பகங்கள் உருவாகிவிடுகின்றன. முகத்திலும் பிறப்புறுப்பிலும் ரோமங்கள் குறைந்துவிடுகின்றன.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆபத்தாக விந்தணுக்களின் எண்ணிக்கையும் டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் ரொம்பவும் குறைந்து ஒரு கட்டத்தில் ஆண்மையே பறி போய்விடுகிது. ஆக, மது ஆண்மைக்கு உலை வைக்கிறதே தவிர உச்சக்கட்டத்தை நீட்டிப்பதில்லை.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!