இடுப்பில் அறுவை சிகிச்சை செய்தேனா..? ‘பேச்சுலர்’ திவ்யபாரதி வேதனை!

உருவக்கேலி குறித்து நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
திவ்ய பாரதி

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படம் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் திவ்ய பாரதி. ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் ‘பேச்சுலர்’ பட நாயகி திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘பேச்சுலர்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கதிர் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனார் திவ்ய பாரதி. இந்தப்படத்திற்கு முதலில் ‘லவ் டுடே’ என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் பிரதீப் தன்னுடைய படத்திற்கு இந்த தலைப்பை புக் செய்து விட்டதால் கதிர், திவ்ய பாரதி நடிக்கும் படத்திற்கு ‘ஆசை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

திவ்ய பாரதிக்கு சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் இணையத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்வது வழக்கம். அதே நேரம் இவரின் உடல் அமைப்பு குறித்து கேலி கமெண்ட்களும் வரும். இந்நிலையில் உருவக்கேலி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் திவ்ய பாரதி.

அதில், சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த நாட்களில், “Fanta Bottle Structure” (எலும்புக்கூடு) போன்று மிகவும் பயங்கரமான கருத்துக்களை என் உடல் அமைப்பை வைத்து கூறினார்கள்.

எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம் இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல. அதன் பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து எனது மாடலிங் பயணத்தை தொடங்கி உடல்வாகுக்காக பாராட்டுக்களை பெற ஆரம்பித்தேன்.

நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட் பற்றி கேட்கத் துவங்கினர். அனைத்திற்கும் எப்போதும் வெறுப்பவர்களும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தபோது, அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!