சாலையில் ஸ்கூட்டருடன் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்… தப்பியோடிய டிரைவர்!

டெல்லி எல்லையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அமைந்துள்ளது. நொய்டாவின் செக்டார் 96 பகுதியில் உள்ள இ-ஸ்கொயர் என்ற பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வருபவர் தீபிகா திர்பதி (வயது 24).

இவர் கடந்த ஞாயிற்றுகிழமை தான் வேலை செய்துவரும் ஓட்டலுக்கு பணியாற்ற ஸ்கூட்டரில் சென்றுள்ளார். ஓட்டல் அருகே செல்லும் சாலையில் திரும்பியபோது சாலையில் மறுமுனையில் வேகமாக வந்த ஜாகுவார் சொகுசு கார் தீபிகாவின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.

இதில், தீபிகா ஸ்கூட்டருடன் சாலையில் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தீபிகாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்கூட்டர் மீது மோதி இளம்பெண் பலியாக காரணமான காரை ஓட்டி வந்த அரியானாவை சேர்ந்த சாமுவேல் ஆண்டிரு பைஸ்டர் என்ற நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற பிரபல நிறுவனத்தில் வேலை செய்துவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!