வடிவேலு வாய்ப்புகளை தடுத்தார்.. அனாதையாக நிற்கிறேன்.. பிரபல நடிகை கண்ணீர்!

தனது கணவர் இறந்து விட்டதால் வாழ்வதற்கு வழியில்லாமல் மகளுடன் அனாதையாக நிற்பதாக நடிகை பிரேமா பிரியா தெரிவித்துள்ளார்.

ஏபிசிடி, பம்பரக் கண்ணாலே, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், சிங்கம், அருவம், யானை, ராஜா ராணி, வேங்கை உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை பிரேமா பிரியா. நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார் பிரேமா பிரியா. ராஜா ராணி படத்தில் மாடர்ன் லுக்கில் நடித்திருப்பார்.

கணவர் மரணம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநரான தனது கணவரை பறிகொடுத்தார் நடிகை பிரேமா பிரியா. பிரேமா பிரியாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தனது கணவரை இழந்த பிரேமா பிரியா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளர். அதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும் குழந்தையுடன் நிற்கதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரிதாக சம்பளம் இல்லை

தற்போது தனது மகளை படிக்க வைக்க, அவரது எதிர்காலத்தை பார்க்க தான் மட்டும்தான் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன்னை போன்ற கலைஞர்களுக்கு பெரிதாக சம்பளம் எதுவும் கிடைக்காது என்றும் தனது கணவர் இருந்ததால் தான் நடிப்பதற்கு முயற்சி செய்யவில்லை என்றும், தற்போதுதான் வாய்ப்புகளை பெற முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார். கணவர் இறந்த பிறகுதான் வாழ்க்கை புரிகிறது என்றும், தன்னையும் தனது மகளையும் தான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சூழ்நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வடிவேலுதான் காரணம்

மேலும் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு நடிகர் வடிவேலும் ஒரு காரணம் என்ற அவர், சுறா படத்தில் நடித்த போது, அவருடன் தனக்கு ஒரு காட்சி இருந்ததாகவும் ஆனால் வடிவேலு என்னை அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறி வேறு ஒரு ஆர்ட்டிஸ்ட்டை போட்டார். இதனால் அவரிடம் தான் நேரடியாக சண்டை போட்டதால் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகை பிரேமா பிரியா.

வாய்ப்புகளை தடுத்தார்

தன்னை வடிவேலுவிடம் அறிமுகப்படுத்திய ஆர்டிஸ்ட்க்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்தது. அதனால் தனக்கு வந்த வாய்ப்புகளை வடிவேலு தடுத்தார். இதனால் படப்பிடிப்பிலேயே பிரச்சனை இருந்த நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோர் முன்னிலையிலும் வடிவேலுவை தான் திட்டி விட்டதாக தெரிவித்துள்ளார்.

மோசமாக உள்ளது

இதனால் தற்போது வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தனது கணவரும் இறந்துவிட்டதால் வாழ்க்கை மோசமாக சென்று கொண்டு இருக்கிறது என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் நடிகை பிரேமா பிரியா. மேலும் இதன்பிறகு சினிமா வாய்ப்புகளை பெற தொடர்ந்து முயற்சி செய்வேன் என்றும் தற்போது 4 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை பிரேமா பிரியா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!