கள்ளக்காதலனுடன் உல்லாசம்… குழந்தை சாவில் திடீர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருபவர் பாலு (42). இவரது அக்கா மகள் துர்காதேவி (26).

இவரது கணவர் ராஜதுரை(31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாட்டால், தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர்.

கடந்த நவம்பர் 25ம் தேதி துர்காதேவி தனது குழந்தையுடன், தாய்மாமா பாலுவின் தோட்டத்தில் வந்து தங்கியுள்ளார். அன்றிரவு அங்கு விளையாடிய குழந்தை திடீரென மாயமானது. மறுநாள் (26ம் தேதி) காலை பார்த்த போது தோட்ட கிணற்றில் குழந்தை இறந்து மிதந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து நிலக்கோட்டை ேபாலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் துர்காதேவிக்கும், நிலக்கோட்டை அடுத்த தோப்புபட்டியை சேர்ந்த அஜய்க்கும் (21) கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு அஜய், துர்காதேவி உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றபோது, குழந்தையை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கி விட்டு சென்றதும், அப்போது குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அஜய், துர்காதேவியை கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாயின் கள்ளக்காதலால் கிணற்றில் குழந்தை தவறி விழுந்த இறந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!