ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 5 காதலிகள்.. ஒரு வாலிபருக்காக கட்டிபுரண்டு சண்டை!

பஞ்சாபில் 4 பணக்கார பெண்கள் ஒரு வாலிபரை கடத்தி சென்ற பாலியல பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற இன்னொரு சம்பவம் பீகாரில் நேற்று நடந்துள்ளது.

ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் அதுவும் நடுரோட்டில். அதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் அங்கு நடந்த கண்காட்சி ஒன்றுக்கு சென்று உள்ளார். இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அதுகுறித்து இளைஞரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அவரும் ஆவேசமாக வந்து சண்டை போட்டார். இப்படியே மொத்தம் 5 காதலிகள் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்துவிட்டனர். இவர்களுக்கு நடுவே அந்த காதலன் மாட்டிக்கொண்டார்.

5 பேரையும் ஒரே சமயத்தில் இளைஞர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்துள்ளார். 5 பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும், கண்காட்சியிலேயே சண்டை போட்டுக்கொண்டனர்.

இவர்கள் சண்டைபோட்டதை அங்கிருந்த பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன், சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்தனர்.

ஆனால், யாரையுமே தடுக்க முடியவில்லை.. “அவன் என் லவ்வர், அவன் என்னுடைய பாய்பிரண்ட்” என்று 5 பேரும் மாற்றி மாற்றி சரமாரியாக தாக்கி கொண்டார்கள்.

இந்த வீடியோவை பார்த்ததுமே பல நெட்டிசன்கள், வழக்கம்போல் தங்கள் பாணியில் கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!