பிக் பாஸ் விக்ரமனின் திருமணத்தை நினைத்து கண்ணீர் விட்ட அவரது தந்தை.!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி ஐம்பது நாட்களை கடந்துவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதையடுத்து இந்த சீசன் துவங்கிய முதல் இரண்டு வாரங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக ஜி.பிமுத்து இருந்து வந்தார்.

ஆனால் தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தினால் தானாகவே போட்டியிலிருந்து வெளியேறினார் ஜி.பி.முத்து.

இதையடுத்து ஷாந்தி குறைவான வாக்குகளை பெற்று வெளியேற அதைத்தொடர்ந்து அசல்,, ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஸினி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

கடைசியாக ராபர்ட் மாஸ்டர் வெளியேற தற்போது 14 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் அனைவர்க்கும் பிடித்த போட்டியாளராக இருப்பவர் விக்ரமன் தான்

நிகழ்ச்சி துவங்கிய சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த விக்ரமன் அதன் பின் தன் கேமை விளையாட துவங்கினார்.

தற்போது ரசிகர்களின் அதிக வாக்குகளை பெரும் போட்டியாளராக உயர்ந்துள்ளார் விக்ரமன்.

விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்தார் விக்ரமன். ஆனால் அவர் நடித்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அரசியல், செய்தியாளர் என இறங்கிய விக்ரமனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அவரின் தந்தை சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் விக்ரமனின் திருமணம் எப்போது என் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விக்ரமனின் தந்தை, நானும் விக்ரமனிடம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். ஆனால் அவர் இதுவரை செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஒருவேளை நல்ல நிலைமைக்கு வந்த பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாரோ விக்ரமன் என்பது தெரியவில்லை என அவரது தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!