பிக்பாஸ் வீட்டில மாமா வேல பார்க்கிறாங்க… விளாசிய வனிதா!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து வரும் டாஸ்க் குறித்து கடுமையாக விமர்சித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி, மைனா நந்தினி மற்றும் தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசன் இரண்டு வாரம் கடந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற ஜிபி முத்து தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார் மற்றும் செரீனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் விஜே மகேஸ்வரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வீடு இந்த வாரம் ராயல் மியூசியமாக மாறி உள்ளது. அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் இருந்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரோஸ்ட் டாஸ்க் நடந்தது. இதில் ஒருவரை ஒருவர் கேள்விக் கேட்டோ அலது நக்கலாக பேசி பேசியோ ரோஸ்ட் செய்ய வேண்டும். அப்போது மணிகண்டனும், அமுதவாணனும் ஒருவரை இருவர் கலாய்த்து கொண்டனர்.

இந்த டாஸ்க் குறித்து பேசிய வனிதா விஜயகுமார், இந்த வீட்டில இருக்குறவங்க எல்லாரும் மாமா வேலை பார்க்குறாங்க. கொஞ்சம் கூட நெறிமுறையே கிடையாது. மணிகண்டனிடம் அமுதவாணன் ரோஸ்ட்டிங் டாஸ்க்கில் குயின்ஸியை நீ லவ் பண்றியான்னு கேக்குறான். மணிகண்டனுக்கு வெளியில் ஒரு மனைவி குழந்தை இருக்கிறது என்று தெரியாதா? இப்படியா ரோஸ்ட் பண்றது?

ஒரு விஷயம் உண்மையாக இருந்தால், அதை நக்கல் நய்யாண்டியுடன் பேசுவது தான் ரோஸ்ட், பொய்யாக ஒரு விஷயத்தை எப்படி பேசலாம்? எதுக்கு இந்த மாதிரி நான்சென்ஸ்ஸா பேசுறான்? என்று பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!