திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த அமீர்கான்..?

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் அமீர்கான். இவரது நடிப்பில் தமிழ் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான லால்சிங் சத்தா படம் படுதோல்வி அடைந்தது.

லால்சிங் சத்தா திரைக்கு வரும் முன்பே படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் ஹேஷ்டேக் டிரண்ட் ஆனது படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வினியோகஸ்தர்கள் அமீர்கானிடம் நஷ்டஈடு கேட்டு வந்தனர்.

நஷ்ட ஈடை சரிகட்ட அமீர்கான் தனது சம்பளத்தை வாங்காமல் விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்துக்காக அமீர்கான் 4 ஆண்டுகள் உழைப்பை கொடுத்தார்.

அந்த உழைப்புக்கான ஊதியமாக ஒரு பைசா கூட பெறவில்லை. இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமீர்கான் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறும்போது. ‘நான் 35 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.

லால் சிங் சத்தா’ படத்திற்குப் பிறகு ‘சாம்பியன்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருந்தேன். அது ஒரு, அழகான கதை, சிறந்த திரைக்கதை. ஆனால் நான் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க விரும்புகிறேன். என் குடும்பத்துடன், என் அம்மா, என் குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன்.’ என்றார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!