ஷிவின் வாழ்க்கையில் மலர்ந்த காதல்.. கலங்கிய ரச்சிதா.!

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர் ரச்சிதாவிடம் தனது காதல் குறித்து ஷிவின் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசன் துவங்கிய பிறகு ஒரு வாரம் கழித்து வைல்ட் கார்டு எண்டரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் மைனா நந்தினி. இரண்டு வாரம் கடந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற ஜிபி முத்து தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார்.

அதனை தொடர்ந்து மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார் மற்றும் செரீனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ரச்சிதாவிடம் தனது காதல் குறித்து ஷிவின் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், தான் ஐடியில் வேலை பார்த்தபோது ஒருவருடன் நட்பாக பழகியதாகவும் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி விட்டதாகவும் கூறினார். தங்கள் காதல் பிரச்சினை இல்லாமல் நன்றாக சென்று கொண்டிருந்த போதுதான் தான் காதலிப்பதை அம்மா கண்டுபிடித்து விட்டதால் ’காதல் எல்லாம் உனக்கு வேண்டாம், உன்னை பற்றிய விஷயம் அவங்க குடும்பத்துக்கு தெரிந்தால் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அந்த குடும்பத்தின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை எடுத்து அம்மாவின் பேச்சை கேட்டு தனது காதலை மறந்து விட்டதாகவும் கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து தன்னிடம் பேச முயற்சி செய்ததாகவும், தற்போது அவர் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் நல்ல பெண்ணை கல்யாணம் செய்து நல்லபடியாக வாழ்ந்தால் தனக்கு மகிழ்ச்சி என்றும் உருக்கமாக பேசியுள்ளார் ஷிவின். இதனையடுத்து ரச்சிதா அவருக்கு ஆறுதல் கூறினார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!