அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்… கடும் கோபத்தில் ரச்சிதா கணவர்!

ரச்சிதாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் ராபர்ட் மாஸ்டர் மீது அவரது கணவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமான ரச்சிதா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கணவர் தினேஷ்

ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து இருப்பதாக தகவல் வெளியானது. மனைவியை பிரிந்து இருப்பது குறித்து சமீபத்தில் பேசிய தினேஷ், விரைவில் எல்லாம் சரியாகும் என்று கூறியிருந்தார்.

முத்தம் கேட்ட ராபர்ட்

ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் முதல் ஆளாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் வழிந்து வருகிறார். அவரது கையை பிடித்து இழுத்தது, அவரிடம் முத்தம் கேட்டது போன்ற சம்பவங்கள் ரச்சிதாவின் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குடும்பத்தினர் கோபம்

இதுகுறித்து ராபர்ட்டிடம் தெளிவுப்படுத்திய ரச்சிதா, நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூறினார். ஆனாலும் அடங்குவதாய் இல்லை ராபர்ட் மாஸ்டர். ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கையால் ரச்சிதாவின் கணவரான தினேஷ் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தினேஷ் மட்டுமின்றி அவரது மாமியார் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் செம கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெட் கார்டு கொடுக்க…

ராபர்ட் மாஸ்டர் இப்படியே செய்து கொண்டிருந்தால், தினேஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெண் போட்டியாளர்களை, தடவியும், உரசியும் எல்லை மீறி வந்த அசல் கோளாறு ரசிகர்களின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரும் அதேபோன்று ஒரு சம்பவத்தை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!