ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரை விட்ட நடிகர்!

மும்பையில் நடிகர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.


டிவி நடிகர் ஆனந்த் வீர் சூர்யவன்சி என்பவர் பல்வேறு இந்தித் தொடர்களில் நடித்திருக்கிறார். இவரை அனைவரும் சித்தாந்த் வீர் சூர்யவன்சி என்று அழைப்பதுண்டு. சூர்யவன்சி இன்று உடற்சியில் ஈடுபடுவதற்காக ஜிம்முக்கு சென்றார்.

உடற்பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அந்தேரியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். அவருக்கு வயது 46. அவரது மரணம் டிவி நடிகர்கள் மற்றும் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகரின் மரணத்தை நடிகர் ஜெய் பனுசாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தி விரைவிலேயே இறந்துவிட்டதாகக் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி டிவி துறையில் சித்தாந்த் மிகவும் பிரபலமாகும். ஆரம்பத்தில் மாடலாக அறிமுகமான சித்தாந்த் குசும் என்ற டிவி நிகழ்ச்சியில் முதலில் அறிமுகமானார்.


இறந்துபோன சித்தாந்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு முன்பு காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த ராஜு ஸ்ரீவாஸ்தவா கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சுருண்டு விழுந்து டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதே போன்று பாலிவுட் படங்களில் நடிகர் சல்மான் கானுக்கு டூப் போட்டு நடிக்கும் சாகர் பாண்டே என்பவரும் கடந்த செப்டம்பர் மாதம் ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

பாண்டே சல்மான் கானுக்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் டூப் போட்டு நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் 3 பேர் தொடர்ச்சியாக ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.-News & image Credit: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!