துக்கம் தாங்காமல் நேர்க்காணலில் கண்ணீர் விட்டு கலங்க வைத்த சமந்தா!

யசோதா பட விளம்பரத்தின்போது தன் உடல்நலம் குறித்து பேசிய சமந்தா கண் கலங்கிவிட்டார். அதை பார்த்தவர்கள் இப்போ ஏன் இந்த அழுகை என்கிறார்கள்.


யசோதா பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சமந்தா
சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார். அதில் இருந்து முழுவதுமாக குணமடையவில்லை.

இருப்பினும் தான் நடித்திருக்கும் யசோதா பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.

மெலிந்து காணப்படும் சமந்தாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா திடீர் என்று அழுதுவிட்டார். ஊடகங்களில் வந்தது போன்று தன் உயிருக்கு ஆபத்து எல்லாம் இல்லை என்றார்.

சமந்தா கண் கலங்கியதை பார்த்த ரசிகர்களும் கலங்கிவிட்டார்கள். சமந்தா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

நீங்கள் தைரியமான பெண். மயோசிடிஸ் எல்லாம் ஒன்னுமே இல்லை. இதையும் கடந்து வருவீர்கள். உங்களின் கெரியர், தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத பிரச்சனை இல்லை.

உடை, குழந்தை, விவாகரத்து விஷயங்களுக்காக உங்களை பலரும் சமூக வலைதளங்களில் விளாசினார்கள். அதற்கெல்லாம் நச்சுனு நெத்தியடி கொடுத்த எங்க சம்மு இப்படி அழக் கூடாது.

இப்போ ஏன் இந்த அழுகை. உங்களின் பலமே தைரியம் தான். தைரியமாக இருங்க சம்மு. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

யசோதா படத்தில் நடித்தபோது கூட தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை யாரிடமும் சொல்லாமல் தைரியமாக இருந்திருக்கிறார் சமந்தா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!