அக்குளில் உள்ள அசிங்கமான கருமையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நீக்குவது எப்படி..?


பெண்கள் மட்டுமே அலகு நிலையங்களுக்கு சென்ற காலம் மாறி தற்போது ஆண்களும் அழகு நிலையங்களுக்கு செல்லும் காலம் தோன்றி விட்டது. முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல் உடலை அழகாகவும் வசீகரமாகவும் வைத்திருப்பதில் இன்றைய இளைஞர் யுவதிகள் அக்கறை செலுத்துகின்றனர்.

உடல் என்று வரும் போது வியர்வையை வெளியேற்றும் அக்குள் பகுதியையும் கவனம் செலுத்த வேண்டும். வேலைப்பழு காரணமாக அதிக வியர்வை ஏற்பட்டு ஆண்கள்; பெண்கள் என பால் வேறுபாடின்றி அக்குள் பகுதி கருமையாகக் காணப்படுவதுண்டு.
இந்த கருமையை வீட்டிலேயே எவ்வாறு போக்கிக் கொள்வது என்று நாம் இப்போது பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
01. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
02. அரைத் தேக்கரண்டி மஞ்சள் தூள்
03. பசும்பாலை 80 பாகை செல்சியசிற்கு சூடாக்கிப் பெறப்படும் ஒரு தேக்கரண்டி மலாய்
04. ஒரு தேக்கரண்டி ஸ்கிரப்
05. அரைத் தேக்கரண்டி தேன்


செய்முறை
நல்ல சவர்க்காரம் ஒன்றால் உங்கள் அக்குள் பகுதியை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்னர் இளுஞ்சூடான தண்ணீரால் கழுவவும். உங்களிடம் உள்ள ஸ்கிரப்பைக் கொண்டு அக்குள் பகுதியில் வட்டமாக தேய்க்கவும். பின்னர் கொதித்தாறிய தண்ணீரால் அக்குள் பகுதியை சுத்தப்படுத்தவும். ஒவ்வொரு நாளும் இவ்வாறு ஸ்கிரப் செய்வது கூடாது என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.

எலுமிச்சை சாறு, மஞ்சள், மலாய் மற்றும் தேன் என்பவற்றை கலந்து அதை பசை போல் ஆக்கிக்கொள்ளவும். பின்னர் அதனை அக்குள் பகுதியில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரால் அக்குள் பகுதியை நன்கு கழுவி விடவும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்வதன் மூலம், அக்குள் பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!