சார்லஸை உறவுக்கு அழைத்த இளவரசி டயானா! மறுத்த சார்லஸ்! சர்ச்சையாகும் புத்தகம்!

ஆமா இவரு பெரிய இளவரசர் சார்லசு, இவங்க இளவரசி டயானா என தமிழ்ப்படங்களில் காமெடியாக பேசுவதை பார்த்திருப்போம். அந்தளவு கண்டங்களை தாண்டி இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி டயானா பிரபலமானவர்கள்.

ஆனால், அவர்களின் மணவாழ்கையோ அப்படி ரசிக்கும் படி இல்லை. ஏகப்பட்ட பிரச்சனைகள், விவாகரத்து இறுதியில் இளவரசி டயானாவின் மரணம் என பெரும்சோகம்.

சமீபத்தில்தான் உலகப்புகழ்பெற்ற எலிசபெத் மகாராணியும் இறந்து போனார். அந்த சோகம் மறைவதற்குள் இளவரசர் சார்லசும் மன்னர் ஆகிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஒன்றில் சார்லஸ் மற்றும் டயானா தம்பதியரின் அந்தரங்க உறவு குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சர்ச்சையான புத்தகம்!

கிறிஸ்டோபர் ஆண்டர்சன் என்பவர் எழுதியுள்ள The King: The Life of Charles III என்ற புத்தகத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் மோசமான பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் நடைபெற்றது என்று எழுதியுள்ளார். மேலும் , அரச குடும்பத்தினரும், அரசு அதிகாரிகளுமே இருவருள் ஒருவருக்கு ஏதாவது நடக்க போகிறது என்று பயந்து கொண்டுதான் திருமணத்தில் நின்றுகொண்டிருந்தனர் என்றும் குறிப்பிட்டுளார்.

மன்னர் சார்லஸின் முன்னாள் காதல்!

குறிப்பாக சார்லஸின் முன்னாள் காதலியான கமிலா குறித்து டயானா சத்தம் போட்டு கோபமாகவும், கேலியாகவும் பேசியதை சார்லஸின் வேலையாட்கள் பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கூட மணமக்கள் அழுது கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாள் சார்லசை பின்தொடர்ந்து அறைக்கு அறை மாறி மாறி டயானா சென்றதாகவும், சார்லசும் நிக்காமல் சென்றதாகவும் அவரை நிறுத்தி ஏன் என்னுடன் இப்போதெல்லாம் நெருக்கமாக இருப்பதில்லை, என்னோடு உறங்க கூட வருவதில்லை என டயானா கேட்டதை வேலையாள் ஒருவர் பார்த்திருக்கிறார். 1984 ஹேரி பிறந்ததற்கு பிறகு அவர்களுக்குள் இருந்த அனைத்து பாலியல் நெருக்கங்களையும் சார்லஸ் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

​மன்னர் சார்லஸ் ஓரின சேர்க்கையாளரா?

டயானாவின் கேள்விக்கு பதிலளித்த சார்லஸ் , தெரியவில்லையே டியர், ஒரு வேளை நான் ஓரின சேர்க்கையாளனாக இருப்பேனோ என்று கிண்டலாக கூறியிருக்கிறார். அதே போல், சார்லஸ் நான் யாரென்று உனக்கு தெரியுமா? எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தன் ராஜா ஆசையை மனதில் வைத்து கொண்டு டயானாவை பார்த்து கூறியுள்ளார்.

​நீயெல்லாம் ராஜாவாகமாட்டா!

சற்றும் தாமதிக்காத டயானா நீ ஒரு மோசமான மிருகம்! உன்னால் எப்போதும் ராஜாவாக முடியாது. உன் அம்மாவுக்கு பிறகு வில்லியமை ராஜாவாக ஆக்குவேன் என்று சார்லசை பார்த்து கத்தியிருக்கிறார் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகத்தின் ஆசிரியர் கூற்றுப்படி, சார்லஸின் முன்னாள் காதலி கமீலா பற்றி தெரியவந்த பிறகே இருவருக்குள்ளும் சண்டைகள் முற்றியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புத்தகத்தின் தகவல்கள் பிரிட்டன் அரச குடும்பத்தில் மட்டுமல்லாது உலக அளவில் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!