லிப்ட் இடைவெளியில் சிக்கிய தலை… 16 வயது சிறுமிக்கு நடந்த சோகம்!

மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்த சிறுமி ரேஷ்மா (வயது16). சம்பவத்தன்று அங்குள்ள கட்டிடத்தின் 5-வது மாடியில் தனது சகோதரர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது லிப்ட் கதவில் இருந்த ஜன்னல் இடைவெளியில் விளையாட்டாக தலையை வைத்திருந்தாள். துரதிர்ஷ்டவசமாக லிப்ட் கீழே இறங்கியது. அப்போது சிறுமியின் தலை மோதி லிப்ட் நின்றது. இதில் சிறுமி அலறி துடித்தாள்.

சிறுமி பலி

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுமி ரேஷ்மியை காப்பாற்ற முயன்றனர். சுமார் 15 நிமிடம் போராட்டத்துக்கு பிறகு சிறுமியை மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானாள். தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!