கிளம்பும் முன்பு நிவாஷினியிடம் அசல் சொன்ன விஷயம்… பார்வையாளர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் 6 வீட்டை விட்டு கிளம்பும் முன்பு நிவாஷினியிடம் அசல் சொன்ன விஷயம் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக சாந்தி அக்கா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு தடவல் மன்னன் அசல் கோலாரை வெளியேற்றிவிட்டார்கள்.

அசல் கிளம்பும் முன்பு நிவாஷினி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தார்கள். கதறவில்லை ஆனால் அசலை கட்டிப்பிடித்து அழுதார்.

அப்பொழுது நிவாஷினியிடம் அசல் சொன்ன விஷயம் தான் அவரை வெளியேற்றியதில் தவறே இல்லை என்பதை புரிய வைத்தது.

அப்படி இப்படி இருக்கணும்னு தோனுச்சுனா சீக்கிரமா வெளியே வா என்று நிவாஷினியிடம் தெரிவித்தார் அசல்.

பிக் பாஸ் வீட்டில் கேமராவுக்கு முன்பே அந்த புள்ளையுடன் என்னவெல்லாமோ செய்தார் அசல். இதில் கேமரா, ஆட்கள் இல்லாத இடத்தில் சந்தித்தால் சொல்லவா வேண்டும். என்ன தைரியம் இருந்தால், வெளியே வா ஜாலியாக இருக்கலாம் என்பார் அசல் என பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வந்த அசலை, நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா என்று கமல் ஹாசன் கிண்டல் செய்தார். அவர் கலாய்க்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் பதில் அளித்தார் அசல் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!