சிங்கப்பூர் மாடலுடன் காதல் லீலையில் அசல்.!

பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார், நிவாஷினி நடந்து கொள்ளும் விதத்தை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் வைல்ட் கார்டு எண்டரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் மைனா நந்தினி நுழைந்தார். சீரியல் நடிகை சாந்தி எவிக்ட் ஆனார். ஜிபி முத்துவும் அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடாமான பிரச்சனைகளில் சிக்கி வருகின்றார். அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் இணையத்தில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பெண் போட்டியாளர்களிடமும் கடலை போட்டு வந்தார். ஜிபி முத்துவே ஏன் தம்பி நீங்க பசங்க கூட எல்லாம் பேச மாட்டீங்களா என பங்கமாக கேட்டு கலாய்த்தார். இந்நிலையில் அசல் கோலார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசுகிசு எழுந்துள்ளது. அதற்க்கு ஏற்றார் போல் இருவரும் சற்று நெருக்கமாகவே பழகி வருகிறார்கள்.

சிங்கப்பூர் மாடல் நிவாஷினி பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் அவரை அசல் கோலார் பாட்டு பாடியே கவர்ந்து விட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அசல் கோலாரும் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!