பப்லு திருமண விஷயத்துக்கு ஆதரவாக பேசிய காஜல் பசுபதி..!

நடிகர் பப்லு பிருதிவிராஜ், மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு காஜல் பசுபதி தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் பப்லு என்கிற பிருத்திவிராஜ். தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பல்வேறு சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சில தொழில்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் மலேசியாவில், தொழில் நிறுவனம் தொடங்க உதவி செய்த பெண் ஒருவரை நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இவர் தன்னுடைய மனைவி பீனாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், பப்லு திடீர் என இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.

நேற்று இந்த தகவலுக்கு விளக்கம் கொடுத்த நடிகர் பப்லு, திருமணம் செய்து கொள்ள உள்ளது உண்மைதான். ஆனால் தற்போது வரை இது குறித்து நான் முடிவு எடுக்கவில்லை என கூறினார். மேலும் எதையும் திருட்டுத்தனமாக செய்ய விரும்ப மாட்டேன், எனவே எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறுவேன் என தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் விரைவில் பப்லுவிக்கு திருமணம் நடைபெற உள்ளது உறுதியான நிலையில், இதுவரை திருமண நடக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் பிரபலமும், தொகுப்பாளினிமான காஜல் பசுபதி இதுகுறித்து தன்னுடைய விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது பல்லு இருக்கிறானா பக்கோடா சாப்பிடுறான்.. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? டாக்ஸிக் வேர்ல்ட்… பொறாம புடிச்ச உலகம் என தெரிவித்திருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.asianetnews * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!