ரச்சிதாவை பார்த்து அப்படி ஒரு கருத்தை சொன்ன அசீம்!

பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இதற்கு முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரை காப்பியடிக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசன் துவங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் வைல்ட் கார்டு எண்டரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் மைனா நந்தினி. மற்ற பிக்பாஸ் போல் இல்லாமல் இந்த சீசனில் பெரும்பாலும் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாதவர்களே நுழைந்துள்ளனர்.

வழக்கமான ஆட்டம் பாட்டங்களுடன் இந்த சீசன் துவங்கியுள்ளது. முதல் வாரமே போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகள் ஆரம்பமானது. இந்நிலையில் ரேங்க் டாஸ்க் பெயரில், பல போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட விஷயம் பரபரப்பை கிளப்பியது. அசீம் சகா போட்டியாளரை வாடி, போடி என கூறியது, பதிலடிக்கு ஆயிஷா செருப்பை கழட்டி அடிக்க போனது என பல விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், ரச்சிதா குறித்து ADKவிடம் பேசிய அசீம், “நான் ரச்சிதாவிடம் ‘நீங்கள் கேமரா அருகே சென்று கொஞ்சுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை’ என்று கூறினேன். ஏதாவது இருந்தா, அவங்களே போய் கேமரா முன்னாடி பேசிப்பாங்க. இதற்கு முந்தைய பிக்பாஸ் சீசன்களில், ஒரு பொண்ணோ பையனோ கேமரா முன்னாடி பேசி அதுல அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆகி இருப்பாங்க. அதை ரச்சிதாவும் எடுத்துக் கொண்டு செய்கிறார்கள் என நான் வெளிப்படையாக தான் சொன்னேன்.

இதற்கு முந்தைய சீசனில் ஒரு பெண் இப்படி தான் செய்தார். அது யார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை. அப்படி செய்து அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதை அப்படியே ரச்சிதா இங்கு காப்பி அடிப்பது போல எனக்கு தெரிந்தது. அதை நான் அவரிடம் வெளிப்படையாக சொன்னேன்” என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!