காருக்குள் மகாலட்சுமி செய்த அநியாயம்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

புது மண தம்பதிகளான மகாலட்சுமியும் ரவிந்தரும் மிட் நைட்டில் காருக்குள் செய்த காரியத்தை பார்த்து திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளராக கெரியரை தொடங்கியவர் நடிகை மகாலட்சுமி. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் விஜேவான மாகலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பெரும்பாலும் வில்லி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமிக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

கணவர் விவகாரத்து

ஏற்கனவே அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் மகாலட்சுமி. அனில் – மகாலட்சுமி தம்பதிக்கு சச்சின் என்ற 6 வயது மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார் மகாலட்சுமி.

நடிகருடன் தொடர்பு

மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்த மகாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வரை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஈஸ்வரின் மனைவி மகாலட்சுமி தனது கணவருடன் சாட் செய்த மெஸேஜ்களை வெளியிட்டு இருவருக்குமான தொடர்பை அம்பலப்படுத்தினார்.

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் மகாலட்சுமி கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பிரபல தயாரிப்பாளரான ஃபேட்மேன் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் திருப்பதியில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

திட்டும் நெட்டிசன்ஸ்

தொடர்ந்து ஹனிமூன் போட்டோ, கணவருடன் கோவில்களுக்கு செல்லும் போட்டோ மற்றும் ரொமான்டிக் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மிட் நைட்டில் காருக்குள்

அதாவது மிட் நைட்டில் காருக்குள் ரவீந்தருடன் பிரியாணி வாங்கி சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் மகாலட்சுமி. மேலும் புரட்டாசிக்குப் பிறகு மிட் நைட்பிரியாணி சிறந்த உணர்வாக இருந்தது… நான் செய்யும் அனைத்து அநியாயங்களுக்கும் என்னுடன் இணைந்ததற்கு நன்றி என ரவீந்தரின் பெயரை குறிப்பிட்டு டேக் செய்துள்ளார்.

பொறுமையில்லையா?

இதனை பார்த்த ரசிகர்கள், அடக்கடவுளே அதுக்குன்னு மிட் நைட்டில் காரிலேயேவா இப்படி அநியாயம் செய்வீர்கள்? விடிந்தப் பிறகு சாப்பிட பொறுமையில்லையா? என கேட்டு விளாசி வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அப்பாடா புரட்டாசி முடிந்து விட்டது என மகாலட்சுமிக்கு ஆதரவாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!