மகளின் கடைசி ஆசை இது தான்… டிவி நடிகையின் அம்மா கண்ணீர் பேட்டி!

காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட நடிகை வைஷாலி தாக்கரின் கடைசி ஆசையை அவரின் அம்மா தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நடிகை வைஷாலி தாக்கரின் கடைசி ஆசை என்னவென்பது தெரிய வந்திருக்கிறது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வைஷாலி தாக்கர் அக்டோபர் 16ம் தேதி இந்தூரில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் தொடர்பாக வைஷாலி இப்படி ஒரு முடிவு எடுத்தது தெரிய வந்துள்ளது. வைஷாலி கடைசியாக எழுதிய கடிதமும் கிடைத்தது.

கடிதம்

தன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தொழில் அதிபரான ராகுல் நவ்லானி தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக கடிதத்தில் எழுதியுள்ளார் வைஷாலி. இந்நிலையில் தன் மகளுக்கு நியாயம் வேண்டும் என்று வைஷாலியின் தாய் அனு கவுர் தாக்கர் தெரிவித்துள்ளார்.

அம்மா

அனு கூறியதாவது, ராகுல் வைஷாலிக்கு தொல்லை கொடுத்து வந்தது அவரின் மனைவிக்கு தெரியும். இருப்பினும் வைஷாலியால் தன் திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்று அந்த பெண் புகார் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு வைஷாலி நார்மலாக இருந்தார் என்றார்.

திருமணம்

அனு கவுர் மேலும் கூறியதாவது, திடீர் என்று வைஷாலி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வைஷாலி இந்தூரில் இருந்தார். வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வைஷாலிக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டோம் என்றார்.

கடைசி ஆசை

வைஷாலியின் திருமணத்தை நிறுத்த ராகுல் முயற்சி செய்து வந்தார். ராகுலுக்கு தண்டனை கிடைத்ததால் தான் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று வைஷாலி தன் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். அது தான் அவரின் கடைசி ஆசை ஆகும் என அனு கவுர் தாக்கர் தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!