விஜே சித்ராவுக்கும் அந்த தொகுப்பாளருக்கும் தொடர்பு உண்டு… பகீர் கிளப்பும் ஹேமந்த்!

விஜே சித்ரா தற்கொலைக்கும் விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் தொடர்பு உள்ளதாக சித்ராவின் கணவரான ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

பிரபல விஜேவாகவும் சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. சித்து என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் சித்ரா.

சித்ரா தற்கொலை

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனது கணவர் ஹேமந்துடன் சென்னைய அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்துதான் காரணம் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல் புள்ளிகள்

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சித்ரா தற்கொலைக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் சில அரசியல் புள்ளிகள் இருப்பதாகவும் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர்களால் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறினார். ஹேமந்தின் குற்றச்சாட்டுகள் சித்ரா வழக்கில் சூட்டை கிளப்பியது.

தொகுப்பாளருக்கு தொடர்பு

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சித்ராவின் கணவரான ஹேமந்த், சித்ரா தற்கொலைக்கும் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரக்ஷனுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சித்ராவை ரக்ஷன் பல நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகவும் ரக்ஷன் சித்ரா குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் சித்ராவின் நண்பரான ரோகித்திடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு பரபரப்பு

சித்ரா மரணத்தின் போதே ரக்ஷனின் பெயர் அடிபட்டது. ஆனால் இதனை மறுத்த ரக்ஷன், தனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாக கூறிய சித்ராவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார். முன்னதாக அரசியல் பிரமுகர்களுக்கு சம்மந்தம் இருப்பதாக கூறிய ஹேமந்த் தற்போது ரக்ஷன் பெயரை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!