ஒரே நேரத்தில் 8 மனைவிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸார்! எதற்காக தெரியுமா..?


பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே வெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஐந்து பேர் ஏற்கனவே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மீனவர்களின் மனைவியரான இவர்கள் எட்டுப் பேரும், கணவர்கள் தொழிலுக்குச் சென்றபின் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர்கள் எட்டுப் பேரும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.-Source: virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!