பிக்பாஸ் வீட்டுக்குள் மனைவி… பிரிந்து போன கணவர் போட்ட பதிவு!

பிக்பாஸ் சென்றுள்ள தனது மனைவி ரச்சிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சீரியல் நடிகர் தினேஷ்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளன. சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா, அதன்பின்னர் ’சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரச்சிதா. திருமணத்திற்கு பின்னரும் பல சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென தினேஷ் மற்றும் ரக்சிதா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தனித் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ரச்சிதா தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளது குறித்து அவரை பிரிந்து வாழும் கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ’பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரது இதயங்களை வெல்ல ரச்சிதாவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!