கண்ணெதிரே என் கணவருக்கு முத்தம் கொடுத்தாள்.. ‘மகராசி’ நடிகை கதறல்!

தனது கணவருக்கு சீரியல் நடிகையுடன் தொடர்பு உள்ளதாக கூறிய மகராசி நடிகை திவ்யா, தன் கண் முன்னே இருவரும் நெருக்கமாக இருந்ததாக கதறியுள்ளார்.

Dhivya: தனது கணவரான சீரியல் நடிகர் அர்னவுக்கு சீரியல் நடிகையுடன் தொடர்பு உள்ளதாக கூறிய மகராசி நடிகை திவ்யா, தன் கண் முன்னே இருவரும் நெருக்கமாக இருந்ததாக கதறியுள்ளார்.

கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை திவ்யா. சமீபத்தில் சக சீரியல் நடிகரான அர்னவை திருமணம் செய்து கொண்டார். திருமண போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த திவ்யா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

சீரியல் நடிகர் அர்னவ்

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் தனது கணவரான அர்னவ், கர்ப்பிணியான தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாக கூறினார். இதனால் தனக்கு ப்ளீடிங் ஏற்பட்டதாகவும் கண்ணீருடன் பேசியிருந்தார்.

அர்னவ் மீது புகார்

திவ்யாவின் அந்த கதறல் வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கணவரான சீரியல் நடிகர் அர்னவ் மீது பல்வேறு பகீர் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் திவ்யா.

கேளடி கண்மணியின் போது

செய்தியாளர் சந்திப்பில் திவ்யா பேசியதாவது, “நான் திவ்யா என் கணவர் பெயர் அர்னவ். 2017ஆம் ஆண்டு கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினோம். நான் திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும் எனக்கு ஒரு குழந்தை இருப்பதும் அர்னவுக்கு தெரியும்.

5 வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்

நான் ஷூட்டிங் ஸ்பாட் வரும்போது என் குழந்தையுடன்தான் வருவேன். என் அம்மா, என் குழந்தையையெல்லாம் தெரிந்துதான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார் அர்னவ். பிறகு 5 வருடங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். வானகரத்தில் ஒரு ஃபிளாட் வாங்கினோம். அதற்கு ஃபினான்சியலா நான் தான் சப்போர்ட் பண்ணினேன்.

மதம் மாற சொன்னார்

கல்யாண பரிசு சீரியல் முடிந்ததும் அர்னவுக்கு வேலை இல்லை. கொரோனாவால் அவங்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது. அப்போது ஃபினான்சியல் அனைத்தையும் சீரியலில் நடித்துக்கொண்டு நான்தான் பார்த்து கொண்டேன், ஈஎம்ஐ எல்லாம் நான்தான் கட்டினேன். கடந்த ஜூன் 29 ஆம் தேதி நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். மதம் மாறினால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் கூறினார். நானும் மதம் மாறினேன்.

நான் கன்சீவ் ஆனேன்

பின்னர் என் ஆசைக்காக காஞ்சிபுரம் சிவன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். பாரிஸில் முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். அன்றே பதிவு திருமணமும் நடைபெற்றது. வாழ்க்கை சந்தோஷமாக இருந்துச்சு. நான் கன்சீவ் ஆனதும் அவங்களுக்கு என்ன ஆச்சுனு தெரியல. நிக்காஹ் முடியிற வரைக்கும் கல்யாண போட்டோ எதையும் சோஷியல் மீடியால போடக்கூடாதுன்னு சொன்னாங்க.

செல்லம்மா ஹீரோயினுடன் ரூமில்..

அப்போதான் செல்லம்மா சீரியல் ஹீரோயின் கூட அர்னவ் ரொம்ப க்ளோஸா இருக்கிறதா தகவல் வந்துச்சு. நான் ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போனேன். அப்போ ரெண்டு பேரும் ரூம்ல க்ளோஸா இருந்தாங்க. அசிஸ்ட்டன்ட்ஸ் வெளியே இருந்தாங்க. அவங்க க்ளோஸா இருக்கிறத நான் பார்த்துட்டேன். அவங்கக்கிட்ட கேட்டப்போ அந்த நடிகை நான் கன்சீவா இருக்கேன்னு தெரிஞ்சும் என் வயித்துல வாட்டர் பாட்டீலால அடிச்சிட்டா.

டெலிட் பண்ணுமாறு கூறினார்

அர்னவும் என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அந்த பொண்ணாலதான் எல்லா பிரச்சனையும். கல்யாண போட்டோ மற்றும் வீடியோவை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தேன். ஆனால் அதை டெலிட் பண்ணலன்னா விவாகரத்து பண்ணிடுவேன்னு அர்னவ் என்னை மிரட்டினார். அதனால பயந்து நான் டெலிட் பண்ணிட்டேன். என்னை பிளாக் பண்ணிட்டார். அடுத்த நாள் அவங்களோட இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண வீடியோ ஒரு விளம்பர படம் என்று பதிவிட்டார்.

என் கண்முன்னே கிஸ்

அதுகுறித்து நான் கேட்டபோது என்னையும் விளம்பர படம் என்று சொல்ல வேண்டும் என்றார். இப்போ என்னோட வாழ முடியாதுன்னு சொல்லிட்டார். அவங்க அப்பாக்கிட்ட பேச முடியல. குழந்தை வேண்டாம் என்கிறார். இப்போ நான் என்ன பண்றது. எனக்கு நேராவே அந்த பொண்ணு ஐ லவ் யூன்னு சொல்லி என் ஹஸ்பண்ட்ட கிஸ் பண்றா. அந்த நடிகையுடன் உள்ள தொடர்பால்தான் அர்னவ் என்னை அவாய்ட் செய்கிறார்.” இவ்வாறு கண்ணீர்மல்க பேசியுள்ளார் நடிகை திவ்யா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!