“அது நினைத்துப்பார்க்க முடியாத வலி” – விவாகரத்து குறித்து பில்கேட்சின் முன்னாள் மனைவி!

உலக பெரும்பணக்காரரான பில்கேட்சுக்கும், மெலிண்டா பிரஞ்ச் என்பவருக்கும் கடந்த 1994-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, கருத்துவேறுபாடு காரணமாக பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்றபோதிலும் தாங்கள் இருவரும் சேர்ந்து அமைத்த அறக்கட்டளையில் பில்கேட்ஸ் – மெலிண்டா தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பில்கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா நேற்று அமெரிக்காவின் பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது, அவரிடம் பில்கேட்சிடமிருந்து விவாகரத்து பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மெலிண்டா, திருமண உறவில் நீடிக்காததற்கு எனக்கு சில காரணங்கள் இருந்தன. ஆனால் கோரோனா காலத்தின் வித்தியாசமான விஷயம் என்னவென்றால், நான் செய்ய வேண்டியதை செய்வதற்கான தனியுரிமையை அது எனக்குக் கொடுத்தது.

பில்கேட்சிடமிருந்து விவாகரத்து எண்ணற்ற வழிகளில் நினைத்துப்பார்க்க முடியாத வகையிலான வலியாக இருந்தது. ஆனால், அதை கடந்து செல்ல எனக்கு தனியுரிமை இருந்தது. நான் விலகிச்சென்ற நபரிடம் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் எனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். காலை 9 மணிக்கு நான் அழுதுகொண்டிருந்தாலும், நான் விலகிச்சென்ற நபருடன் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் இணைந்து எனது திறனை வெளிப்படுத்தவேண்டும்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!