என்னை நினைத்தால் எனக்கே அவமானமாக இருக்கு – நடிகை ஸ்ரீரெட்டி பகீர் பேச்சு!

என் அம்மா, அப்பா, தம்பி அனைவரும் என்னிடம் பேசுவது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர் மீடு புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை இவர் ஊடகங்கள் முன்னிலையில் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலகம் மட்டுமில்லாமல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீதும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார். ஆனால் நடிகை ஸ்ரீரெட்டி விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகவும் பலர் இவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து வந்தனர்.

சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யூடிப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது ஏதாவது பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் என்னைக்கு சட்டையை கழட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தினேனோ அன்னைக்கே எல்லாம் போச்சு.

அம்மா முன்பு கூட ஆடை மாற்றாத நான், அன்று அத்தனை பேர் முன்னிலையில் எப்படி சட்டையை கழட்டி ஆர்ப்பாட்டம் செய்தேன் என்று தெரியவில்லை. என் அம்மா, அப்பா, தம்பி அனைவரும் என்னிடம் பேசுவது இல்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் 25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன். அவங்க எல்லோருமே சினிமாவில் மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் , எழுத்தாளர்கள்.

நான் இளம் நடிகைகளுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான் கதைக்கு தேவை என்றால் மட்டும் நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள். ஆடியோ வெளியீட்டு விழா, ஃபோட்டோ ஷூட்டிற்கு எல்லாம் கவர்ச்சி தேவையில்லை. என்னை நினைத்தால் எனக்கே மிகவும் அவமானமாக இருக்கு என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!