நடிகை ரோஜா மகள் குறித்து தீயாய் பரவிய தகவல்!

நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக பரவிய தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, நடிகை ரோஜா நட்சத்திர தம்பதிகளின் மகள் அன்ஷுமாலிகா. இவர் துருவ் விக்ரமின் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. கடந்த சில நாட்களாக இந்த தகவல் தான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது ஆர்.கே. செல்வமணி விளக்கமளித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ரோஜா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்ஷுமாலிகா என்ற மகள் உள்ளார். இவர் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுக்மாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து அவரது தந்தையும், இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி விளக்கமளித்துள்ளார்.

அதி, ‘சிறுவயதிலிருந்தே மகள் அனுஷுமாலிகாதான், எப்போதும் கிளாஸ் டாப்பர். இதுவரை 500 விருதுகள் வரை வாங்கியிருக்கா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாங்கியிருக்கா, அப்படியொரு பெரிய படிப்பாளி. சயின்டிஸ்ட் ஆகவேண்டும் என்பதுதான் அன்ஷுவின் விருப்பம், ஆசை எல்லாமே. எப்போதுமே இன்னோவேட்டிவாதான் பேசுவாள், சிந்திப்பாள்.

மகள், மகன் மீது எங்கள் விருப்பத்தைத் திணிக்கும் பெற்றோராக நானும் ரோஜாவும் இருந்தது கிடையாது. அப்படித் திணித்ததும் கிடையாது. எல்லாமே பிள்ளைகளின் விருப்பம்தான். ப்ளஸ் டூ முடித்துவிட்டு அன்ஷுமாலிகா மேற்படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவேண்டும் என்றதையும் நிறைவேற்றி வைத்தோம். தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க, அமெரிக்கா போயிருக்கா. இன்னும் நாலு வருஷம் அமெரிக்காலதான் இருப்பாள். இப்போதைக்கு அவளுக்கு நடிப்பதில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளார் ஆர்.கே. செல்வமணி.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!