பொறாமையாக இருக்கு… வைரலாகும் மீனாவின் பதிவு.!

‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படம் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவானது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள நந்தினி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று குறிப்பிட்டுள்ள மீனா, நந்தினி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக அவரை பார்த்து நானே பொறாமை பட்டுள்ளேன் என்று கூறியுள்ள மீனா படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!