தவியாய் தவிக்கும் கணவன்… முதலிரவில் ஷாக் கொடுத்த பெண்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஜோடி ஆப் மூலம் 2வது திருமணம் செய்த லாரி டிரைவரிடம் முதலிரவன்றே நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற பெண்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் (48) என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன்பு மனைவி இறந்துள்ளார். இந்நிலையில், ஜோடி ஆப் மூலம் 2வது திருமணம் செய்து கொள்ள பதிவு செய்துள்ளார்.

அதே ஜோடி ஆப்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் பதிவு செய்து லாரி டிரைவர் செந்திலும், கவிதாவும் செல்போனில் பேசி வந்தனர். அப்போது கவிதா தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் செந்திலை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தேவைப்படும்போது செந்திலிடம் பணத்தை சுருட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24ந் தேதி செந்தில் சேலம் வந்த கவிதாவை அங்குள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, எடப்பாடி சாணாரப்பட்டியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். முதலிரவன்றே 4 1/2 பவுன் நகை, வெள்ளிக்கொலுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சுருட்டிக்கொண்டு கவிதா தப்பியுள்ளார்.
ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், கம்ப்யூட்டர் பாகங்கள் மற்றும் பலவற்றில் பிளாக்பஸ்டர் டீல்கள்

இதுகுறித்து செந்தில் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதக கூறி கவிதா தரப்பிலிருந்து 2 வழக்கறிஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளனர். அப்போது, செந்திலிடம் பணம், நகையை திருப்பி தரவதாக கூறி சமாதானம் செய்து விட்டு எதுவுமே திருப்பி தராமல் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட செந்தில் கூறும்போது, தனது மனைவி இறந்து விட்ட நிலையில் தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் ஜோடி ஆப் மூலம் 2வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் இதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ஏமாற்றப்பட்டதாகவும் என்னிடமிருந்து கவிதா திருடிச்சென்ற பணம் நகைகளை திரும்ப பெற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஏமாற்றிய பெண் தண்ணிடம் பேசிய ஆடியோ மற்றும் போட்டோ, வங்கிகணக்கிலிருந்து பணம் அனுப்பிய ஆதாரம் இருப்பதாகவும் கூறினார். ஜோடி ஆப் மூலம் தொடர்பு கொண்டு 2வது திருமணம் செய்த பெண் முதலிரவன்றே கணவரிமிருந்து நகை பணத்தை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!