2 மாத கர்ப்பம்… திடீரென காதலரை மணந்த நடிகை!

நடிகருடன் திருமணமாகாமல் வாழ்ந்து வந்த சின்னத்திரை நடிகை திவ்யா, கர்ப்பமான நிலையில், காதலர் அர்ணவ்வை நேற்று திருமணம் செய்துள்ளார்.

சின்னத்திரையில், ‘கேளடி கண்மணி, மகராசி, செவ்வந்தி’ போன்ற தொடர் களில் நடித்தவர் திவ்யா. ‘செல்லம்மா’ தொடரில் நடித்தபோது, அதில் நாயகனாக நடித்த அர்ணவ் உடன் நட்பு ஏற்பட்டது.

நட்பு காதலாக மாறிய நிலையில், ஐந்தாண்டுகளாக திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
தற்போது, இருவரும் திடீரென திருமணம் செய்துள்ளனர்.

இத்திருமணம் ஹிந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி நடந்துள்ளது. திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். தற்போது, இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக, திவ்யா கூறியுள்ளார்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!