வாட்ஸ்-அப்பில் சகோதரனுக்கு தகவல் அனுப்பிவிட்டு குளத்தில் குதித்து இளம்பெண் விபரீதமுடிவு!

வயநாடு அருகே சகோதரனுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிவிட்டு குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள விகாஸ் காலனியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு பிரவீனா (வயது 20) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று பிரவீனா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு குளத்திற்கு சென்றார்.

குளத்தின் மேட்டுப்பகுதியில் நின்று கொண்டு சகோதரனுக்கு செல்போனில் வாட்ஸ் அப் மூலம் நான் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என அனுப்பிவிட்டு அவர் குளத்தில் குதித்துவிட்டார்.

இதையடுத்து சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்கள் வீட்டின்பின்புறம் உள்ள குளத்தை நோக்க விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிரவீனா குளத்து தண்ணீரில் மூழ்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதையடுத்து அங்கு இருந்து சிலர் குளத்தில் குதித்து தண்ணீரில் மூழ்கிய பிரவீனாவை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் பத்தேரி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குளத்தில் மூழ்கிய பீரவினாவை 1 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் அவரை அந்தப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரவீனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குளத்தில் குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!