கல்லூரி காதலருக்காக கணவரை திட்டம் தீட்டி கொன்ற மனைவி..!

தருமபுரி மாவட்டம் நரசிபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கடந்த சனிக்கிழமை 30-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மனைவியும், மகனும்:

முதற்கட்ட விசாரணையில், இறந்தது சோம்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பது தெரியவந்தது. டெம்போ வாகன ஓட்டுநராக இருந்து வந்த மணிக்கு, திருமணமாகி அம்சவள்ளி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது. சொந்த ஊரை விட்டு நரசிபுரத்தில் யார் இவரை கொலை செய்திருப்பார் என போலீசார் விசாணை நடத்தி வந்தனர்.

கணவன்-மனைவி தகராறு:

மணியின் குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. மணியின் மனைவி அம்சவள்ளிக்கு நிறைய ஆண்களுடன் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவரை கொல்ல திட்டம்:

சமீபத்தில் கூட, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு காவல்நிலையம் வரை சென்ற நிலையில், பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில், பஞ்சாயத்து நடந்து, சேர்ந்து வாழும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது மட்டும் நின்றபாடில்லை. தனது கல்லூரி கால காதலருடன் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்திற்கு கணவர் மணி இடஞ்சலாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார் அம்சவள்ளி.

கணவரின் நண்பரும் உடந்தை:

அதன்படி, அம்சவள்ளி அவரது காதலன் மற்றும் கணவர் மணியின் நண்பர் சந்தோஷ் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர் சேர்ந்து மணியை கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சம்பவத்தன்று அம்சவள்ளி கணவன் மணியை நன்கு மது அருந்த வைத்து, மணியின் நண்பரான சந்தோஷுடன் அனுப்பி வைத்துள்ளார்.

அடித்து, உதைத்து கொலை:

சந்தோஷ் தனது நண்பர் லோகேஷுடன் சேர்ந்து மணியை இருசக்கர வாகனத்தில் நரசிபுரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு நடு இரவில் அழைத்து சென்று, கைக் கால்களை கட்டி வைத்து கழுத்தில் மித்தித்தும், அடித்து, உதைத்தும் கொலை செய்துள்ளனர். அத்தோடு நில்லாமல் பெட்ரோலை இறந்த மணியின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு பெங்களூருக்கு தப்பி சென்றுள்ளனர்.

3 பேர் சிறையில் அடைப்பு:

இதனையடுத்து பெங்களூருவுக்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த சந்தோஷ் மற்றும் லோகேஷை கைது செய்து பெரும்பாலை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அத்தோடு கணவரை திட்டமிட்டு கொலை செய்த அம்சவள்ளியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.-News & image Credit: malaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!