நடிகை மகாலக்ஷ்மி கையில் இருக்கும் டாட்டூ… யாரோட பேர் தெரியுமா?

சின்னத்திரை நடிகையான மகாலக்ஷ்மியின் கையில் வரைந்திருக்கும் டாட்டூ வைரலாகி வருகிறது.

ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்த நடிகை மகாலக்ஷ்மி சமீபத்தில் லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் தயாரிப்பில் விடும் வரை காற்று என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

விவாகரத்தானவர்கள்

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதுவரை தங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்த இருவரும் கடந்த ஒன்றாம் தேதி திருப்பதியில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே விவாகரத்தான இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்தான்.

முதல் கணவருக்கு திருமணம்

மகாலக்ஷ்மியின் முதல் கணவர் அனில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலக்ஷ்மியின் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இடையில் டிவி நடிகர் ஒருவருடனும் மகாலக்ஷ்மி காதல் உறவில் இருந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாலக்ஷ்மி டாட்டூ

இந்நிலையில் நடிகை மகாலக்ஷ்மி கையில் வரைந்துள்ள டாட்டூ வைரலாகி வருகிறது. நடிகை மகாலக்ஷ்மி தனது இடது கையில் சச்சின் என்ற பெயரை டாட்டூவாக வரைந்துள்ளார். சச்சின் மகாலக்ஷ்மியின் மகன் ஆவார்.

மகன் மீது பாசம்

கணவரை பிரிந்த பிறகு மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மகாலக்ஷ்மி சமீபத்தில் தான் ரவீந்தரை தனது மகனின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மகாலக்ஷ்மியின் மகன் சச்சின் தன்னிடம் ரொம்பவே பாசத்துடன் ஒட்டிக்கொண்டதாக கூறி வருகிறார் ரவீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!