ஒரு உயிர் போயிடுச்சே… பிக் பாஸ் பிரபலத்தை நினைத்து ரசிகர்கள் கவலை!

அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டதே என்று பிக் பாஸ் பிரபலமான சுஜா வருணிக்கு நடந்த விஷயம் பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சுஜா வருணிக்கு நடந்த சம்பவம் குறித்து அறிந்த ரசிகர்களால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தனக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று அந்த சுட்டிப் பையன் கேட்டிருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமானார் சுஜா வருணி.

பிக் பாஸ் 2 ஜோடிகள்

தன் காதல் கணவரான சிவகுமாருடன் சேர்ந்து பிக் பாஸ் 2 ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சுஜா. தங்களின் சூப்பரான நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்தது சுஜா-சிவா ஜோடி. இறுதி வரை வந்து வெற்றி பெற்றார்கள். ஆனால் கர்ப்பணியாக இருந்த சுஜா வருணிக்கு திருமண டாஸ்கின்போது கரு கலைந்துவிட்டது.

கணவர்

பிக் பாஸ் 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் சுஜாவுக்கு அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததே தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் கணவருக்காக அவர் ரிஸ்க் எடுத்து டான்ஸ் ஆட இப்படி கரு கலைந்துவிட்டது. சுஜா தனக்காக செய்த காரியத்தை நினைத்து நெகிழ்ந்து கொண்டிருக்கிறார் சிவகுமார்.

உயிர்

சுஜா தன் கணவருக்காக செய்தது சரி தான். ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டதே. அதை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு சுஜா வருணியிடம் தெரிவித்துள்ளனர். கடவுள் மீண்டும் ஒரு குழந்தையை கொடுப்பார், கவலைப்படாதீங்க அக்கா என்கிறார்கள் ரசிகர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!