அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்… அமீரிடம் காதலை சொன்ன பாவனி!

பிக் பாஸ் பிரபலமான பாவனி ரெட்டி ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டார்.

பிக் பாஸ் 5 வீட்டில் இருந்தபோது பாவனி ரெட்டி மீது காதல் கொண்டார் அமீர். தன் காதலை பாவனியிடம் கூறினார். ஆனால் அவர் காதலை உடனே ஏற்கவில்லை. பிக் பாஸை அடுத்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியும், அமீரும் ஜோடியாக கலந்து கொண்டனர். பிபி ஜோடிகள் டைட்டிலை வென்ற பாவனி ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

காதல்

பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பாவனி கூறியிருப்பதாவது, அமீர் மாஸ்டர், டான்ஸ் ஆடுவது எனக்கு மிகப் பெரிய சவால். அதிலும் போட்டியில் கலந்து கொள்வது பயமாக இருந்து. ஆனால் நீங்கள் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். டான்ஸ் தெரியாதவரை ஆட வைத்து, வெற்றி பெறச் செய்துவிட்டீர்கள் என்றார்.

முத்தம்

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அமீரின் காதலை பாவனி ஏற்றுக் கொண்டுவிட்டார். பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட காதல் ஒன்று திருமணத்தில் முடியப் போகிறது என்று சமூக வலைதளவாசிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திருமணம்

இது ஒரு அழகான பயணம். அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். உங்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் ஒரு அழகான மனிதர். நீங்கள் ஒரு சிறந்த டான்ஸர், ஆதரவான டான்ஸ் பார்ட்னர், சிறந்த நண்பர். நம் வாழ்க்கை பயணத்தை சேர்ந்து துவங்கலாமா, என்னுடைய சிறந்த வாழ்க்கை துணையாக இருங்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் மிஸ்டர் அமீர். நீங்கள் என்னுடையவர். ஐ லவ் யூ என்று பாவனி மேலும் தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!