38 வயதில் காதல் திருமணம் – குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகை.!

பிரபல சீரியல் நடிகையான சந்திரா லட்சுமணன் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

மனசெல்லாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவர் ஹோட்டல் நிர்வாக பயிற்சியில் ஈடுபட்டு கொண்ண்டிருந்த போது இயக்குனர் சந்தோஷ் மூலம் மனசெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்திருந்தார் சந்திரா.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்திரா.இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் சின்னத்திரையில் ’கோலங்கள்’ ’மகள்’, ’சொந்தபந்தம்’, ’பாசமலர்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். சந்திரா கடந்தாண்டு நீண்ட நாள் காதலித்து வந்த டோஷ் கிறிஸ்டி என்பவரை தனது 38 வயதில் திருமணம் செய்துக் கொண்டார். டோஷ் மலையாள சீரியலான ‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் சந்திரா உடன் இணைந்து நடித்து வந்தார்.

ரீல் ஜோடிகளான இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினர். இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். சந்திராவின் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!